புதன்கிழமை மாலை பொழுதில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அங்கு காயங்களுடன் கிடந்த ஆண் ஒருவர் காவல்துறையின் விசாரணை காவலில் தற்பொழுது வைக்கப்பட்டு உள்ளார்.
யோக் பகுதியின் காவலர்களுக்கு முகம் தெரியாத நபரிடமிருந்து சிக்கலான அழைப்புகள் வந்ததாகவும், அந்த அழைப்புகள் அனைத்தும் இரவு 8 மணிக்கு முன்பு கிங் ரோடு பகுதியில் உள்ள பாண்டு கிரசன்ட் என்ற நகரிலுள்ள யாஞ்சி தெருவிலிருந்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
YRP advising there is a large police presence in the Bond Cres. & King Sd Rd. Our Major Crimes unit has been engaged. 1 Male Adult in custody. No threat to the public. There will be larger police presence there for a time.
— York Regional Police (@YRP) February 25, 2021
காவலர்கள் அங்கு வந்திருந்த பொழுது பெண்ணின் சடலம் வீட்டிற்குள்ளும் பலத்த காயத்துடன் ஆடவர் தீவிரமான நிலையில் இருந்ததாகவும் கூறுகின்றனர்.
மேலும் அந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அங்கிருக்கும் மக்கள் அனைவரையும் மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தி உள்ளதாக கருத்துக்கள் வெளிவருகின்றன.
Ongoing homicide investigation in Richmond Hill at a residence on Bond Crest. An adult female was pronounced deceased at the scene. An adult male suspect was arrested and taken to hospital with injuries. There will be a police presence but there is no threat to public safety
— York Regional Police (@YRP) February 25, 2021
காவல்துறையினர் பல கோணங்களில் இந்த வழக்கினை விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பல தரப்பிலும் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்ற நிலையில் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பல்வேறு விதமாக விசாரணை செய்து வாக்குமூலங்களை பதிவு செய்துகொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படியுங்க: அதிகாலை பயங்கரம்! அபாயகரமான நிலையில் உள்ள ஆண்! கனடாவில் பீல் பிராந்திய காவல்துறையின் அறிவிப்பு!