கனடாவில் நள்ளிரவு 12 மணிக்கு சாலையில் சென்ற போது உயிரிழந்த 16 வயது சிறுமி! பதைபதைக்க வைக்கும் சம்பவ குற்றவாளி ஒரு தமிழரா.?

toronto.ctvnews.ca
toronto.ctvnews.ca

கனடாவில் பிராம்டன் நகரில் நள்ளிரவில் சாலையில் சென்ற போது 16 வயது சிறுமி கார் மோதி கொல்லப்பட்ட வழக்கில் கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிராம்டன் நகரில் கடந்த ஜனவரி மாதம் இச்சம்பவம் நடந்தது. நள்ளிரவு 12.20 மணிக்கு Dianna Manan என்ற 16 வயது சிறுமி, Gore Road and Queen Street அருகில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

அந்த சமயத்தில் அவ்வழியாக வாகனத்தில் சென்ற நபர் சிறுமி தலையில் பலத்த காயத்துடன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் சிறுமி மருத்துவமனைக்கு தூக்கில் செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அவர் டொராண்டோவை சேர்ந்தவர் என தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஆதிநாத் சங்கர்  என்ற 21 வயது நபரை கைது செய்துள்ளனர்.

அவர் மீது மரணத்தை ஏற்படுத்திவிட்டு, சம்பவ இடத்தில் நிற்காமல் சென்றதாக வழக்குப்பதியப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms