Theresa Tam : ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டவது அலை பரவ வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் அங்கிருக்கும் ஒரு சில நாடுகளில் இப்போது கொரோனா பரவலின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதனால் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கனடாவிலும் கொரோனாவில் இருந்து தப்பிப்ப்பதற்காக, தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
கொரோனாவிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உடலுறவின் போது முகமூடி அணிவதைக் கவனியுங்கள் என்று கனடாவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் தெரசா டாம் கடுமையாக அறிவுறுத்தினார்.
உடலுறவின் போது மக்கள் முத்தத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும், சுய இன்பம் மிகக் குறைவான ஆபத்துள்ள பாலியல் விருப்பமாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.
இது குறித்து அவர் விடுத்த அறிக்கையில், விந்து அல்லது யோனி திரவத்திலிருந்து வைரஸ் பரவுவதற்கான ஆபத்து மிகக் குறைவு என்று விளக்கினார்.
இருப்பினும், அந்நியர்களுடனான பாலியல் நடவடிக்கைகள் தொற்றுநோயை அதிகரிக்கும். மேலும், முத்தமிடுவது போன்ற நேருக்கு நேர் தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகள் அதிக ஆபத்துள்ள செயலாகும்.
“கோவிட் -19 இன் போது உடல் ரீதியான நெருக்கத்தை உள்ளடக்கிய பிற செயல்பாடுகளைப் போலவே, நோய்த்தொற்று ஏற்படுவதற்கும், வைரஸ் பரவுவதற்கும் உள்ள அபாயத்தைக் குறைக்க நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன,” என்று அவர் கூறினார்.
பாலியல் செயல்பாடுகளுக்கு முன்னால், உறவு கொள்ளப்போகும் இணையிடம் அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும் என்று டாக்டர் டாம் அறிவுறுத்தினார். ”
பாலியல் ஆரோக்கியம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் ஒரு அங்கம் என்று வலியுறுத்தினார்.
கனடியர்கள் முன்னேற்றத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் உடல் ரீதியான நெருக்கத்தை அனுபவிப்பதற்கான வழிகளைக் சிறப்பான முறையில் கண்டறிய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படியுங்க: Woodbine : கனடாவில் படகு பாறையின் மீது மோதியதில் தமிழர் உயிரிழப்பு! காயமடைந்த 6 பேரும் தமிழர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.