கனடாவில் டொராண்டோ ( toronto) நகரில் இரண்டு வயது குழந்தை ஒன்று, 14 ஆவது மாடியிலிருந்து விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை விழுந்து கிடந்த பகுதி வழியாக ஒரு நபர் நடந்து சென்றுள்ளார். அப்போது படுகாயமடைந்த நிலையில் குழந்தை கிடப்பதைக் கண்ட அவர் பதறிப் போய் காவல் துறையினரை அழைத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த மருத்துவ உதவிக் குழுவினர், குழந்தையை அவசர சிகிச்சை மையம் ஒன்றிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி, அந்த 2 வயது குழந்தை பலியாகிவிட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள காவல் துறையினர், அக்குழந்தை 14 மாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்ததாக தாங்கள் கருதுவதாக தெரிவித்துள்ளனர்.
கனடாவில் பெற்ற தாயே இளம் குழந்தைகளை கத்தியால் குத்திய சம்பவம் – ரொறன்ரோவில் பகீர் சம்பவம்!
குழந்தை பால்கனியிலிருந்து விழுந்ததா அல்லது ஜன்னலிலிருந்து தவறி விழுந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும்,
இது குறித்து சரியான விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாடியில் இருந்து விழுந்த குழந்தை எவ்வளவு நேரமாக அங்கேயே கிடந்தது என எந்த விவரமும் தற்போதைக்கு தெரியவில்லை.
அந்த குழந்தையின் தாய்க்கு, நடந்த சம்பவம் குறித்து தெரியும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவரும் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த போது மருத்துவமனையில் இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அக்கம் பக்கத்திலுள்ள கட்டிடங்கள் எதிலாவது CCTV கமெராக்கள் இருக்குமா என தேடி வரும் காவல்துறையினர், யாருக்காவது இந்த சம்பவம் குறித்து தெரிந்தால் தங்களுக்கு தெரிவிக்குமாறு பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/
Twitter : https://twitter.com/canadatms