ஒன்ராறியோவில், வியாழக்கிழமை பிற்பகல், ஒரு காட்டு வான்கோழி கார்களைத் தாக்குவது குறித்த புகாரை விசாரித்ததாக பீல் காவல்துறையினர் தெரிவித்தனர்.
UPDATE:
– Our Turkey was in a fowl mood
– Animal Services has attended, but our feathered friend evaded capture using its impressive 40km/hr speed.
– It is believed the turkey has reunited with its rafter (a term used to described a flock of turkeys) pic.twitter.com/kv9gqeJWWQ— Peel Regional Police (@PeelPolice) December 31, 2020
வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில், ஒருவர் பீல் காவல்துறையை அழைத்து, ஒரு காட்டு வான்கோழி போக்குவரத்தைச் சீர்குலைத்து வருவதாக கூறினார்.
மிசிசாகாவில் உள்ள Matheson Boulevard East மற்றும் Explorer Drive மூலையில் கார்களைத் தாக்குகிறது என்று தெரிவித்தார்.
குற்றம் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் திரண்டு வந்து அங்கு அவர்கள் வான்கோழியை கண்டுபிடித்துப் புகைப்படங்களை எடுத்தனர்.
உண்மையான சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று பீல் காவல்துறையின் ஊடக தொடர்பு கான்ஸ்டபிள் Kyle Villers தொலைபேசியில் தெரிவித்தார்.
வான்கோழி காவல்துறையினர் காரைத் தாக்கியது. ஆனால், தாக்குதல் அச்சுறுத்தலை விட போக்குவரத்து ஆபத்து அதிகம் என்று அவர் கூறினார்.
UPDATE:
– Our Turkey was in a fowl mood
– Animal Services has attended, but our feathered friend evaded capture using its impressive 40km/hr speed.
– It is believed the turkey has reunited with its rafter (a term used to described a flock of turkeys) pic.twitter.com/kv9gqeJWWQ— Peel Regional Police (@PeelPolice) December 31, 2020
இருப்பினும், பறவையைப் பிடிக்க விலங்குச் சேவைகள் வந்தபோது, 40 கிமீ / மணி வேகத்தில் வான்கோழி தப்பி ஓடிவிட்டது என்று பீல் காவல்துறையினர் ட்வீட் செய்துள்ளனர்.
வான்கோழி தப்பிவிட்டது. எனவே அது வான்கோழிகளின் கூட்டத்திற்கு திரும்பிச் சென்றதாக காவல்துறையினர் நம்புகிறார்கள்.
இதையும் படியுங்க: கனடாவில் மாட்டிறைச்சி மற்றும் காட்டு எருமையின் இறைச்சியால் வந்த வினை – மக்களுக்கு எச்சரிக்கை!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.