ஒன்ராறியோ கிட்டத்தட்ட 1,800 புதிய கொரோனா பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இதனால் சில பகுதிகள் கூடுதல் பொது சுகாதார கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.
வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு 1,780 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 25 இறப்புகள் பதிவானதாக சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
இது ஒரு நாள் முன்னதாக பதிவான 1,824 பாதிப்புகளில் இருந்து சிறிது குறைவாகும். இதன் விளைவாக, ஏழு நாள் சராசரி 1,757 ஆக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை கடந்த வாரம் இந்த நேரத்தில் இருந்ததை விட 18 சதவீதம் அதிகமாகும். இது 1,489 ஆகவும், இரண்டு வாரங்களுக்கு முன்பு 1,372 ஆக இருந்த இடத்தை விட 28 சதவீதம் அதிகமாகவும் இருந்தது.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் முக்கிய நடைமுறைகள் இப்போது ரத்து செய்யப்படுகின்றன.
இந்த எச்சரிக்கைகளுக்கு மத்தியில் மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகள் காரணமாக மக்கள் சேர்க்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.
வியாழக்கிழமை நிலவரப்படி ஒன்ராறியோ மருத்துவமனைகளில் மொத்தம் 674 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 207 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர்.
வசந்த காலத்தில் தொற்றுநோயின் முதல் அலைக்குப் பிறகு ஐ.சி.யுவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 200 என்ற அளவை தாண்டியது இதுவே முதல் முறையாகும்.
ஏப்ரல் 9 ஆம் தேதி ஐ.சி.யுவில் இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 264 ஆக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை 200க்கும் கீழ் குறைவதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக ஆனது.
இதில் நல்ல செய்தி என்னவென்றால், மாகாணம் 56,001 தனிப்பட்ட சோதனைகளை நடத்தியதால் வெள்ளிக்கிழமை நேர்மறையான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: அவசரகால உத்தரவால் வெளிவந்த டொராண்டோ Adamson BBQ நிறுவனத்தின் மோசடி!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.