Whistler : விஸ்கலருக்கு தெற்கே மூன்று கார் விபத்துக்குள்ளானதில் சனிக்கிழமையன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் இரண்டு குழந்தைகள் அடங்குவர்
வடக்கு நோக்கி வாகனம் ஓட்டும் போது லம்போர்கினி கார், கருப்பு ரேஞ்ச் ரோவருடன் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் கட்டுப்பாட்டை மீறி, டொயோட்டா காரின் மீதும் மோதியது.
இரு வாகனங்களையும் சேர்ந்தவர்கள் இரண்டு குழந்தைகள் உட்பட இன்னும் சிலர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். குழந்தைகள் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“ரேஞ்ச் ரோவர் மற்றும் லம்போர்கினி ஆகிய இரு கார்களின் ஓட்டுநர்களையும் மோட்டார் ஆபத்தாக வாகனம் இயக்கத்திற்காக நாங்கள் விசாரித்து வருகிறோம்,” என காவல் துறையினர் எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்ததைக் கண்ட அல்லது டாஷ்கேம் காட்சிகளைக் கொண்ட எவரும் பொலிஸைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், லாம்போர்கினி கட்டுப்பாட்டை இழந்து மீடியனைத் தாக்கியது.
எதிரில் வந்த வாகனங்களை கடந்து, தெற்கே வரும் ஒரு டொயோட்டாவைத் தாக்கியது என்று ஆர்.சி.எம்.பி அறிக்கை கூறுகிறது.
ஆறு ஆம்புலன்ஸ் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் இந்த விபத்து நடந்த இடத்தை நோக்கி வந்தன.
அவர்கள் ஆறு நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரிட்டிஷ் கொலம்பியா அவசர சுகாதார சேவைகளின் அறிக்கையின்படி, இரண்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மற்ற நான்கு பேருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் இருந்தன.
சம்பந்தப்பட்ட வாகனங்களில் ஒன்று சொகுசு கார் அணிவகுப்புடன் தொடர்புடையது என்று காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வநதுள்ளது.
இதையும் படியுங்க: கனடாவில் பயங்கரம்… வீட்டுக்குள் புகுந்து நடந்த கொலைவெறித் தாக்குதல்!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.