Oshawa : ஓஷாவா ( Oshawa ) நகரில் தந்தை மற்றும் அவரது மூன்று குழந்தைகள் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 48 வயதான வின்னிபெக் சேர்ந்த ஒருவர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வின்னிபெக்கில் உள்ள டால்ஹெளசி டிரைவின் மிட்செல் லாபா குடும்பத்தினர் சுடப்பட்டு உயிரிழந்ததாக டர்ஹாம் போலீசார் கூறுகின்றனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 1:20 மணியளவில் கிங் ஸ்ட்ரீட்டிற்கு வடக்கே ஹார்மனி சாலைக்கு அருகிலுள்ள பார்க்லேன் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டிற்கு போலீசார் முதலில் அழைக்கப்பட்டனர்.
காவலர்கள் அங்கு வந்ததும், நான்கு ஆண், அதில் 18 வயதிற்குட்பட்ட இருவர் மற்றும் ஒரு பெண் வீட்டிற்குள் இறந்த நிலையில் போலீசார் கண்டுபிடித்தனர்.
அதில் வீட்டில் உள்ளவர்களை துப்பாக்கியால் சுட்ட நபர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் வீட்டில் 50 வயது நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் கடுமையான உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
டுர்ஹாம் பிராந்திய காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில், கொல்லப்பட்டவர்கள், 50 வயதான கிறிஸ் ட்ரெய்னர் அவரது குழந்தைகள் பிராட்லி(20); அடிலெய்ட்(15); ஜோசப்(11) என தெரிய வந்துள்ளது.
தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள காவல் துறையினர் இதன் பின்னால் உள்ள நோக்கத்தை விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
Police confirm the deceased were all known to each other (family). 4 males and 1 female were found dead. 50yo female being treated in hospital. Police waiting for coroner. pic.twitter.com/lwNKGr5sql
— Erica Natividad (@CityErica) September 4, 2020
மேலும் காயத்துடன் தப்பிய லோரெட்டா ட்ரெய்னர் என்பவரின் சகோதரரே துப்பாக்கிச் சூடு நடத்திய மிட்செல் லாபா என்பதால், குடும்ப தகராறு ஏதும் காரணமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
குடும்பத்தின் உறவினர் ஒருவரான தப்பிப்பிழைத்த பெண்ணின் குழந்தைகளில் ஒருவரான சாம் சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் இல்லை என்றும் பல்கலைக்கழகத்தில் இருக்கிறார் என்றும் போலீசார் கூறினார்.
இதையும் படியுங்க: ஒரே நாளில் நகரின் புதிய கோடீஸ்வரரான கனேடிய பெண்! அதிர்ஷ்டம் அடித்தது!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.