கனடா முழுவதும் அவசரநிலை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தனது பாடங்களை நேரடி வகுப்பு செல்லாமல் இருப்பினும் இணையதளம் வழியாக அன்றாடம் கற்றுக் கொண்டு வருகின்றனர்.
அவசரகால ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த தேதி நிறைவடையும் நிலையில் இருப்பதால் அனைவரும் நேரடியாக பாடசாலைக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
கேள்விகள் எழுப்புதல் :
டொரன்டோ பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி வரை திறக்கப்பட மாட்டாது என்பது கனடா மக்கள் அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும்.
இதற்கிடையில் ஒன்றிய குழு அதிகாரிகள் போர்டு அரசாங்கத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தொடர் பரவலின் காரணமாக கனடாவில் ஊரடங்கு ஆனது மேலும் நீட்டிக்க படலாம் என்று சில கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
பாடசாலைகளுக்கு திரும்புகின்றனரா?
ஒன்டாரியோ பகுதியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி சாலைகளுக்கு திங்கட்கிழமை (இன்று) திரும்பச் செல்வதாக அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஒன்டாரியோ பகுதியில் தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால் முக கவசம் மற்றும் சனிடைசர் உபயோகித்து சமூக இடைவெளியை பின்பற்றி மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடம் கற்க அனுமதி அளிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
இதையும் படியுங்க: வீட்டை விட்டு வர வேண்டாம்! கனடாவில் மீண்டும் பொதுமக்களுக்கு போடப்பட்ட கட்டுப்பாடுகள்!