கனடா அனுமதி வழங்கிய சில மணி நேரங்களில் கொரோனா தடுப்பூசி – பைசர் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

Virus Outbreak
FILE - In this March 16, 2020, file photo, Neal Browning receives a shot in the first-stage safety study of a potential vaccine for COVID-19

கனடா அனுமதி வழங்கிய சில மணி நேரங்களில் கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுப்பை வழங்க தயாராக இருப்பதாக பைசர் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கிய முதல் நாடாக விளங்குகிறது பிரிட்டன்.

இரண்டாவதாக மத்திய கிழக்கு நாடான பஹ்ரைன் அரசு அனுமதி அளித்தது. இந்த வரிசையில் தற்போது கனடாவும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் அரசு பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அதிகாலை அனுமதி அளித்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்ததாகவும் பைசர் நிறுவனம் கூறியுளளது.

அதுபோல கனடா அனுமதி வழங்கிய சில மணி நேரங்களில் தடுப்பூசி உடனடியாக விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய நிர்வாகிகளுடனான எங்கள் சந்திப்பு பயனுள்ள வகையில் அமைந்தது என்றும், கனடா விரைவில் முடிவெடுக்கும் என்றும் பைசர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி மட்டுமின்றி, இன்னொரு அமெரிக்க நிறுவனமான Moderna மற்றும் AstraZeneca, Jannsen ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசி தொடர்பாகவும் கனடா அரசு சார்பில்  முக்கிய முடிவெடுக்க உள்ளது.

கனடாவுக்கு தேவையான தடுப்பூசி டோஸ்களை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும், அனுமதிக்காக மட்டுமே காத்திருப்பதாகவும் பைசர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கனடா ஏற்கனவே 20 மில்லியன் டோஸ்களுக்கான ஒப்பந்தம் பைஸர் நிறுவனத்திடம் மேற்கொண்டிருந்தது. அது மட்டுமின்றி எதிர்வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை 56 மில்லியனாக அதிகரிக்க செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இதையும் படியுங்க: கனடாவில் 85,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கூடுதல் நிதியுதவி!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.