டொரன்டோ உணவகங்களில் Dine together இன்று ஆரம்பம் – ஜான் டோரி வரவேற்பு

restaurant food
mayor

கனடாவில் Covid-19 வைரஸ் தொற்று காரணமாக பல மாதங்களாக திரையரங்குகள் உணவகங்கள் போன்றவை மூடப்பட்டிருந்தன.Covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் கணிசமாக குறைந்ததை தொடர்ந்து கனடாவின் மாகாணங்கள் முழுவதும் பல்வேறு துறைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

டொரன்டோ நகரில் சுமார் 270 உணவகங்கள் இன்று ஆரம்பமாகும் Dine Toelve திட்டத்தில் கலந்து கொள்ளும் என்று நகரம் கூறுகிறது.ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த உணவகங்கள் மீண்டும் இயங்குவதால் வாடிக்கையாளர்களை மீண்டும் உணவகங்களுக்கு கொண்டு வருவதை இத்திட்டம் குறிக்கோளாக கொண்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டிற்கும் டொரண்டோவில் பருவகால திட்டங்களை போன்ற இந்த அறிவிப்பு இரண்டு வாரங்களுக்கு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மேலும் இரண்டு அதிகப்படியான மெனுக்களை இணைத்து வழங்குகிறது.மெனுக்களில் உணவு வகைகளின் விலைகள் 15$ முதல் 50$ வரை விதிக்கப்பட்டுள்ளது.

டொரன்டோ உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மீண்டும் வாடிக்கையாளர்களை வரவேற்க தயார் நிலையில் உள்ளது. பல மாதங்கள் ஊரடங்கு காலத்திற்குப் பிறகு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஒன்றிணைந்து சிறந்த உணவு வகைகளை உண்பதற்கு சிறந்த தருணமாக அமையும் என்று முதல்வர் ஜான் டோரி வெள்ளிக்கிழமை அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

உணவகங்களில் அமர்ந்து உணவு உண்பதற்கு நீண்டகால மூடுதலுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி உணவகங்களில் உட்புறம் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. டொரண்டோவின் “Dine Together” திட்டம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவகங்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் உணவை ஆர்டர் செய்வதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது