கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன. மாடர்னா, பைசர் போன்ற தடுப்பூசி மருந்துகள் பெரும்பான்மையான அளவில் அனைத்து மாகாணங்களிலும் வழங்கப்படுகின்றன. 12 வயதுக்கு மேற்பட்ட கனடியர்களுக்கு தடுப்பூசி மருந்துகள் இரண்டு தவணையாக செலுத்தப்படுகின்றன.
5 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு covid-19 தடுப்பூசி மருந்தை அங்கீகரிக்குமாறு பைசர் பயோடெக் நிறுவனம் ஹெல்த் கனடாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் 16 வயது உடையவர்களுக்கும் ,மே மாதத் தொடக்கத்தில் 12 முதல் 15 வயது உடையவர்களுக்கும் தடுப்பூசி மருந்து அங்கீகரிக்கப்பட்டு இருந்தது ..
Comirnaty என்ற பெயரில் இந்த தடுப்பூசி மருந்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஜெர்மனியிலுள்ள BioN-tech நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசி உருவாக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான தடுப்பூசி மருந்து அளவுகள் குறித்த தரவை பைசர் நிறுவனம் ஹெல்த் கனடாவிற்கு மாதத் தொடக்கத்தில் சமர்ப்பித்துள்ளது. தடுப்பூசி மருந்துகளின் தரம் மற்றும் செயல்திறனுக்கான தரவுகளை மறுஆய்வு செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதாக ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது.
கனடாவில் 46 மில்லியனுக்கும் அதிகமான பைசர் தடுப்பூசி மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு covid-19 தடுப்பூசி மருந்துகளினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவில் 859 covid-19 தடுப்பூசி மருந்துகளுடன் தொடர்பான வழக்குகளை ஆவணப்படுத்தி உள்ளதாக ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது.