டொரன்டோவிற்கான போக்குவரத்து திட்டங்கள் மற்றும் கிரேட்டர் கோல்டன் ஹார்ஸ் ஷூ போன்ற பகுதியில் எதிர்வரும் காலங்களில் பொதுமக்களின் கருத்துக்களுக்கு அடிப்படையாக அமையக்கூடிய விவாத கட்டுரையை ஒன்டாரியோ அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 34 பக்கங்கள் கொண்ட இந்த விவாத கட்டுரையானது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டது. 2051 ஆம் ஆண்டில் பிராந்தியத்திற்கான 30 ஆண்டு போக்குவரத்து திட்டங்கள் குறித்து அரசாங்கத்தின் பார்வையை முன்வைத்துள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் கரோலின் “பிராந்திய போக்குவரத்து இணையம் மக்கள் தொகை மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சியுடன் வரும் கோரிக்கைகளை நிறைவு செய்ய தயாராக இருக்க வேண்டும் ” என்று ஆய்வறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.” மக்களுக்கு போக்குவரத்து திட்டம் தேவை என்பதை எங்களது அரசாங்கம் புரிந்து கொள்கிறது .இந்த திட்டம் மக்களையும் பொருட்களையும் பல காலங்களுக்கு ஒருங்கிணைக்க வழிவகுக்கும்” என்று போக்குவரத்து துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சில பகுதிகளில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் விரைவில் தொடங்க இருந்தாலும் திட்டங்கள் குறித்த கருத்துக்களை பெறுவதற்காக தாளை வெளியிட உள்ளதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது .இந்த ஆய்வறிக்கை ஆனது முக்கிய போக்குவரத்து திட்டங்களை பட்டியலிட்டுள்ளது. பிராந்தியத்தின் வழியாக பொருட்களை நகர்த்துவதற்கும் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கும் எளிமையான வழிகளை ஆராய்ந்து வருகிறது.
நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு ஜிடிஏ மேற்கு நடைபாதை மற்றும் முக்கிய நெடுஞ்சாலை திட்டங்களை வழங்குகிறது. மாகாணங்கள் முழுவதும் நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்த உள்ளது