தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பாத ஆசிரியர்கள்- பரிசோதனைக்கு ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும்

covid19
Ontario's latest goal for its immunization campaign is to give a dose of COVID-19 vaccine to every adult who wants one by June 20. (Grant Linton/CBC)

ஒன்டாரியோ மாகாணத்தில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதால் மாணவர்கள், பார்வையாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற அனைவரும் covid-19 தடுப்பூசி மருந்துகளை போட்டுக் கொள்வதற்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Covid-19 தடுப்பூசி மருந்துகளைப் பெற விரும்பாத ஒன்டாரியோ பள்ளி ஆசிரியர்கள் அல்லது மருத்துவ விலக்கு பெற்றவர்கள் வாரத்தில் இரண்டு முறை covid-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்குச் சென்ற முதல் இரண்டு வாரங்களுக்கு பரிசோதனைக்காக அருகிலுள்ள மருந்தகத்திற்கு செல்ல வேண்டும். பள்ளிகளை பாதுகாப்பான முறையில் அதிகப்படியான நடவடிக்கையாக வாரத்தில் இரண்டு முறை எதிர்மறையான covid-19 பரிசோதனை முடிவுகளை பெற்றிருக்க வேண்டும் என்று துணை கல்வி அமைச்சர் நான்ஸி வலியுறுத்தியுள்ளார்.

பள்ளி தொடங்கிய முதல் இரண்டு வாரங்களுக்கு,அதாவது செப்டம்பர் 20 வரை பெரும்பாலான வாரிய அலுவலகங்களுக்கு மற்றும் பள்ளிகளுக்கு விரைவில் பரிசோதிக்கும் திறன்கொண்ட ஆன்டிஜன் பரிசோதனை கருவிகள் கிடைக்காது. இதன் காரணத்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஆசிரியர்கள் உள்ளூர் மருந்தகங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படுகிறார்கள்.

ஆன்டிஜன் பரிசோதனை கருவிகள் மூலம் விரைவில் சேவையை வழங்குவதற்கு அரசாங்கம் மருந்தகங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி முதல் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை மருந்தகங்களின் அங்கீகாரம் செயலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மாகாண அரசாங்கத்தின் ஸ்மார்ட்போன் செயலியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பாத ஆசிரியர்கள் விரைவான பரிசோதனை முடிவுகளை பள்ளி வாரியங்களில் பதிவேற்ற முடியும் என்று நெயிலர் குறிப்பிட்டுள்ளார் .தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை எனில் covid-19 விரைவு பரிசோதனைக்கு ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது