கனடாவில் கோடை கால இடங்களை மீண்டும் திறக்கும் மாகாணம்.? மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

கொரோனா ஊரடங்கு காரணமாக, பல மாதங்களாக மூடப்பட்ட, வன்கூவரின் பிரபலமான கோடைகால இடங்கள் சில மீண்டும் திறக்கப்படுகின்றன என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வன்கூவரின் நகர சபை, கோடைக்கால இடங்களில் பார்வையாளர்கள் எங்கு, எப்போது மீண்டும் பொழுதை களிக்கலாம் என்பது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

வருகின்ற ஜூன் 27ஆம் தேதி முதல் நகரம் முழுவதும் 10 ஸ்ப்ரே பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும்.

மேலும், ஜூலை 13 ஆம் தேதிக்குள், நான்கு பொது நீச்சல் குளங்கள், நீச்சல் வீரர்களுக்கு மீண்டும் திறக்கப்படும்.

மேலும், ஒன்பது பீச் பகுதிகள், உயிர்காக்கும் படையினரின் மேற்பார்வையுடன் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நீச்சல் தடாகமும், 30 நிமிடம் மூடப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு அடுத்த குழு மக்கள்  தயாராகுவதற்கு அனுமதிக்கும்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms