Statistics Canada: கனேடிய மருத்துவ சங்கத்தின் ஆரம்பகால ஆராய்ச்சியானது, கனடாவில் குழந்தைகள் கொரோனாவின் இலேசான அறிகுறிகளை அனுபவிப்பதாகக் குறிப்பிடுகிறது.
கனேடிய குழந்தை கண்காணிப்பு திட்டத்தின் (சிபிஎஸ்பி) தரவு படி , ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை குழந்தைகளிடையே 111 கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட, எல்லா வயதினரையும் ஒப்பிடும் போது, பாதிக்கப்பட்ட 13.5 சதவீத பேரில், வெறும் 1.3 சதவீத குழந்தைகள் மட்டுமே கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் பாதி பேர் வேறு காரணத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
உதாரணத்துக்கு, வேறு ஒரு நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சோதனை செய்ய செல்லும் போது கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கனடிய குழந்தை கண்காணிப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு குழந்தைகளிடையே ஒரு மரணம் கூட ஏற்படவில்லை.
இந்த புதிய நோயைப் பற்றி நாங்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கையில், குழந்தைகள் பள்ளிக்கு மீண்டும் திரும்பும்போது,
இந்த ஆரம்ப முடிவுகள் குடும்பங்களுக்கு ஓரளவு நம்பிக்கையைத் தரும் என நாங்கள் நம்புகிறோம் என்று டாக்டர் பாத்திமா கக்கர் செய்தி வெளியீட்டில் தெரிவித்தார்.
பெரியவர்களை விட குழந்தைகளுக்கு கொரோனா தொற்றுடன் போராடுவதற்கு சக்தி அதிகம் இருக்கலாம் என்பதைக் குறிக்கும் பல ஆய்வுகள் உள்ளன.
இந்த வார தொடக்கத்தில் இருந்து அமெரிக்காவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில்,
கொரோனாவுடன் ஒப்பிடும்போது, குழந்தைகள் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சமமான ஆபத்தில் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த ஆராய்ச்சிக்கு, குழந்தைகள் பள்ளிக்கு வெளியே இருந்த நேரத்தில் தரவு சேகரிக்கப்பட்டதாகவும், இதனால்பலருடன் நெருங்கிய தொடர்பு இல்லை என்றும் குறிப்பிடுகிறது. அதாவது குழந்தைக் கண்காணிப்பு தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்தது.
இதையும் படியுங்க: கனடாவில் முகக்கவசம் கட்டாயம்! காவல்துறை அபராதம் விதிக்க முழு அதிகாரம்!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.