ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் அத்தியாவசியமற்ற இடங்களுக்கு தடுப்பூசி சான்றிதழை கட்டாயமாக்கி அறிவித்துள்ளது. தடுப்பூசி சான்றிதழ் மூலம் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் பெறாதவர்களை எளிதாக வித்தியாசம் கண்டறிய முடியும். ஒன்டாரியோவில் தினசரி பதிவாகும் Covid-19 வழக்குகளின் எண்ணிக்கை மாறுபட்டு வருகிறது.
கடந்த புதன்கிழமை 463 covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் பதிவாகியிருந்தன.வியாழக்கிழமை திடீரென உயர்ந்து 864 covid-19 வழக்குகள் பதிவாகின. இன்று கணிசமாக குறைந்து 677 covid-19 வழக்குகள் பதிவாகி உள்ளது என்று மாகாண அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரே நாளில் 700க்கும் குறைவான covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் கண்டறியப்பட்ட சூழலில் இன்று புதிய covid-19 வைரஸ் தொற்றுக்கள் எண்ணிக்கை வாரந்தோறும் குறைந்து வருவதாக ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் கூறுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 37,630 covid-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகளில் நேர்மறை விகிதம் பெற்றவர்கள் 1.9% சதவீதம் ஆகும். கடந்த வாரம் பரிசோதனை முடிவுகளில் நேர்மறையான முடிவுகளை பெற்றவர்கள் 2.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். சென்ற வாரத்தை விட இந்த வாரம் covid-19 தொற்றின் தாக்கம் குறைவு ஆகும்.
70 சதவீத ஒன்டாரியோ மக்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான கனேடிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட covid-19 தடுப்பூசி மருந்துகளை முழுமையாக பெற்றுள்ளனர்.தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் வைரஸ் தொற்றினால் ஏழு மரணங்கள் பதிவாகியுள்ளன.
டொரன்டோ 136 covid-19 வழக்குகளையும் ,யார்க் 73 வழக்குகளையும் மற்றும் பீல் 76 வழக்குகளையும் பதிவு செய்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.