இஸ்லாமிய தொண்டு நீதிமன்றம் நியாயமற்ற இடைநீக்கத்திற்கு எதிராக போராட்டம்

Canada
Toronto, Peel Region

நீண்டகாலமாக நிறுவப்பட்ட இஸ்லாமிய சர்வதேச நிவாரண தொண்டு நிறுவனம் வரி ரசீதுகளை வழங்குவதற்கான அதன் திறனை இடைநிறுத்த தேசிய வருவாய் அமைப்பின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய நீதிமன்றத்தை கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

 

ஒட்டாவாவில் உள்ள ஹியூமன் கன்சன் இன்டர்நேஷனல் ,கனடா வருவாய் ஏஜென்சியின் அபராதம் தேவையற்றது என்றும் , இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களை சோதனை செய்வதற்காக ஏஜென்சி அநியாயமான முறையில் இலக்கு வைத்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு என்றும் கூறியுள்ளது.

 

 

எச் சி ஐ தொண்டு நிறுவனம் 1983 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. தொடங்கப்பட்ட ஆண்டு முதல் இந்த தொண்டு நிறுவனம் ஆனது பல்லாயிரக்கணக்கான தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் தொடர்ந்த ஆதரவை வழங்குகிறது. நெருக்கடிகளில் தவிக்கும் மக்களின் துயரை போக்குவதற்கும், உயிர்களை காப்பாற்றுவதற்கும் மனிதாபிமான உதவி, மேம்பாட்டு செயல்பாடுகள் போன்றவற்றை தொண்டு நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது.

 

 

சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கனேடிய நிதி நன்கொடையாளர்கள் இடமிருந்து நிதி திரட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுடன் கூட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது .

 

எச் சி ஐ தொண்டு நிறுவனத்துக்கு ஏப்ரல் மாதம் 2011 ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 2013 வரை இரண்டு நிதி ஆண்டுகளுக்கு ஒரு தணிக்கை துவங்குவதாக வருவாய் நிறுவனம் அறிவித்தது.

 

இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களை தணிக்கை செய்வதற்கான மத்திய அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் மறு பகுப்பாய்வு பிரிவின் பணிகள் பற்றிய சமீபத்திய வினாக்களை தொடர்ந்து “நாங்கள் மறுஆய்வு காலம் மற்றும் தீர்வுகளை எதிர்பார்த்து இருக்கிறோம் ” என்று டிம் மெக்ஸெர்லி (சிவில் உரிமைகளின் தேசிய ஒருங்கிணைப்பாளர்) கூறியுள்ளார்.

 

தொண்டு நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கமற்ற நிறுவனங்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவர் அமைச்சரவையின் உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் தங்களது கவலைகளை கொட்டி தீர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.