பயங்கர விபத்தில் சிக்கிய திருமண முன்மொழிவு பேனரை சுமந்து சென்ற விமானம் – மான்ட்ரியல்

pilot
flight

மொன்றியல் அருகே சனிக்கிழமை இரவு அங்குள்ள தீவில் விமானம் விழுந்தது. பயங்கர விபத்தில் சிக்கிய விமானம் திருமண முன்மொழிவு பேனரை சுமந்து சென்றது என்று ஆய்வு செய்த அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.விமானத்தை இயக்கிய விமானி ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார்

“நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா ” என்றும் முன்மொழிவு எழுதப்பட்டிருந்த பேனரை விமானம் இழுத்துச் சென்றபோது கொடிய விபத்துக்குள்ளானது என்று கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

விமானியின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன் விசாரணையை நாங்கள் தொடங்குகிறோம் என்று அதிகாரி கிரிஷ் கிரேப்ஸ்கி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விமானத்திலிருந்த இருவர் மட்டுமே பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களைப் பற்றிய முழு தகவல்களை காவல்துறையினர் பகிரவில்லை.

Cessna 172 விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது , ஆனால் விபத்துக்கான காரணத்தை புலன் விசாரணையாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று ஒரு நேர்காணலின்போது கிறிஸ் தெரிவித்தார் .மேலும் விபத்துக்கான காரணம் போன்றவற்றை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

st- லாரன்ஸ் ஆற்றில் விழுந்ததாக நம்பப்படும் திருமண முன்மொழிவு பேனர் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். மான்ட்ரியல் காவல்துறையினர் மாலை 6 மணி அளவில் நிகழ்ந்த விபத்து குறித்த அழைப்புக்கு பதில் அளித்ததாக கூறினர்.

விவரங்களை சேகரிப்பதற்காக விசாரணையாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். விபத்தில் சிதறிய பாகங்கள் ஒட்டாவா ஆய்வகத்திற்கு சோதனைக்காக ஞாயிற்றுக்கிழமை எடுத்துச்செல்லப்பட்டது.