ISIS அமைப்பின் முகமது கலிஃபா மீது குற்றச்சாட்டுகள் – ஆயுள் தண்டனை

islam isis
islamic

வெளிநாட்டு போராளி என்று கூறப்படும் கனடிய நபர் இஸ்லாமிய அரசு ஊடகத்தின் பிரமுகராக பணியாற்றுகிறார். இவர் அமெரிக்க பயங்கரவாத அமைப்பை குற்றம்சாட்டப்பட்டு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதங்கள் மற்றும் பொருளுதவி வழங்குவதற்கு சதி செய்ததாக சனிக்கிழமை மத்திய அதிகாரிகள் கூறினர்.

சவுதியில் பிறந்த கனடிய குடிமகன் முகமது கலிஃபா.இஸ்லாமிய நாடான ஈராக்கில் முக்கிய நபராக இருந்த முகமது சிரியாவில் ஜனநாயக படையால் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டார் .FBI காவலில் முஹம்மது சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். விர்ஜீனியாவின் கிழக்கு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அவர் மீது குற்றங்கள் சுமத்தப் பட்டன.

ISIS அமைப்பிற்காக சிரியாவில் போர்க்களத்தில் போராடியது மட்டுமின்றி வன்முறைக்கு குரல் கொடுத்ததாக வர்ஜினியாவின் கிழக்குபகுதி அமெரிக்க வழக்கறிஞர் ராஜ் பரக் கூறினார். ISIS அமைப்பில் உலகளாவிய ஆட்சேர்ப்பு முயற்சிகளில் முகமது ஈடுபட்டுள்ளார்.

ISIS அமைப்பின் கொடூரமான கொலைகள், வன்முறை தாக்குதல்கள் நிறைந்த காணொளிகளை ஊக்கப்படுத்தும் விதமாக விரிவுபடுத்தியது மற்றும் ISIS ன் ஆன்லைன் பக்கத்தில் அமைப்பின் பிரச்சாரத்தை மொழிபெயர்த்தல் போன்றவற்றில் பங்கேற்றுள்ளார்.

கலிஃபா ISIS அமைப்பின் வன்முறை ஆட்சேர்ப்பு வீடியோக்களில் ஆங்கிலம் பேசுபவராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றியதாக கூறப்படுகிறது. அமெரிக்க குடிமக்கள் மற்றும் பிற நாடுகள் மீது வன்முறையை தூண்டும் வகையில் உள்ள வீடியோக்களில் மொழிபெயர்ப்பாளர் மற்றும் விவரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

முகம்மது கலிஃபா மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.