கனடாவில் கோடை காலம் நிலவி வருவதால், பல மாகாணங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது.
ஒட்டாவாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெப்பநிலை 30° C க்கு மேல் நிலவி வந்ததாக சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது. தற்போது வெப்ப எச்சரிக்கையை முடித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 36.9° C வெயில் சுட்டெரித்தது. இந்த அளவு ஒட்டாவா விமான நிலையத்தில் கடந்த 1988 இல் பதிவான சாதனை அளவான 34.3 ° C காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை 26° C அளவு வரைக்கும் வெப்பநிலை மிக லேசான உயர்வை சந்தித்தது. ஆனால் பெரிய அளவில் அதிகம் உச்சநிலை பெறவில்லை.
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/
Twitter : https://twitter.com/canadatms