கனடாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 66 பேர் உயிரிழப்பு – 609 பேருக்கு பாதிப்பு உறுதியானது!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில், 66பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 609 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் நோயின் தீவிர தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,703 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுக்க பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,335 ஆக அதிகரித்துள்ளது.

இதில் சுமார் 34,064 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக 52,568 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெல்த் கனடா அறிக்கையின் படி, நேற்றைய விவரம்:

இதுதவிர, 1,738 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொற்று வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில், கனடாவில் பல பகுதிகளில் இனவெறிக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.