சீனா தொடர்பாக கனடிய அரசாங்கம் அதிரடியாக அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதாவது சீனாவிற்கு எதிராக கனடிய அரசாங்கம் பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
சீனாவின் உளவு பார்த்ததாக இரண்டு கனடியர்கள் இரண்டு வருட காலங்களாக சிறைபிடித்து சீனா வைத்திருந்தது.
மேலும் அந்த இரண்டு கனடியர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளை கொண்டு செல்வதற்காக கனடிய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்காமல் வழக்கினை சீன அரசாங்கம் நடத்தியது.
இதனை அறிந்த கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
தற்பொழுது சீன அரசாங்கத்திற்கு அதிரடியாக கனடிய அரசாங்கம் பதிலடி கொடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்க வேண்டிய நான்கு சீன அதிகாரிகள் மற்றும் ஒரு சீன நிறுவனம் ஆகிய இரண்டிற்கும் கனடிய அரசாங்கம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பே இந்த பொருளாதார தடைகளை அமல் படுத்தியதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீனா அல்லது சீனாவுடனான வணிகம் மற்றும் பொருளாதார தொடர்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அல்லது ஈடுபட தயாராக உள்ள நிறுவனங்கள் இந்த அறிவித்தலை நன்கு ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்றும் கனடா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.