கனடாவில் குடியேறியவர்களுக்கு ஒன்டாரியோ மாகாணம் எப்போதும் திறந்திருக்கும் – குடிவரவு நியமன திட்டம்

Ontario ford and christine eliot
Ontario ford and christine eliot

ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் போர்டு டோல் சேகரிப்பது குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை போர்டு தெரிவித்த “பிரித்தாளும் கொள்கை ” கருத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

கனடாவின் டெகும்சேயில் இருந்தபோது திறமை வாய்ந்த தொழிலாளர்கள் பற்றாக்குறையை முதல்வர் போர்டு தீர்த்து வைத்தார். போர்டின் கருத்துக்கு பிரபல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒன்ராரியோ மாகாணத்தின் லிபரல் கட்சித் தலைவர் ஸ்டீவன் டெல் டுகா போர்டு தெரிவித்த கருத்துக்கள் “ஏமாற்றம் ” என்று பெயரிட்டார். மேலும் மன்னிப்பு கேட்க வேண்டி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

” டோலைச் சேகரித்து இங்கு தங்குவதற்கு நினைக்கிறீர்கள் ,அவ்வாறு நடக்காது .வேறு எங்காவது சென்றுவிடுங்கள் ” என்று புலம்பெயர்ந்தவர்கள் குறித்து டக் போர்ட் கூறினார். சில நாடுகளில் டோல் சேகரிப்பு என்பது வேலையின்மை சலுகைகளை சேகரிப்பது ஆகும்.

வின்சர் – எசெக்ஸில் மிகப் பெரிய மருத்துவமனைக்கு 9.8 மில்லியன் டாலரை மாகாணத்திற்கு வழங்கும் உறுதிப்பாட்டை முதல்வர் அறிவித்து வெளியிட்டார்.
“குடியேறியவர்கள் மற்றும் ஒண்டாரியோ மக்களை முதல்வர் ஒன்றிணைக்க வேண்டும்.

ஆனால் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் கருத்துக்களை முதல்வர் தெரிவிப்பது ஏமாற்றமளிக்கிறது. தனது மோசமான கருத்துகளுக்காக முதல்வர் டக் போர்டு மன்னிப்பு கேட்க வேண்டும் ” என்று ட்விட்டரில் டெல் தெரிவித்துள்ளார்.

“கடினமாக உழைக்க விரும்பும் எவருக்கும் ஒன்டாரியோ மாகாணம் எப்போதும் திறந்திருக்கும், குடியேறியவர்கள் தங்கள் குடும்பங்களை ஆதரித்து, மாகாணத்திற்கு பங்களிக்க வேண்டும் “என்று முதல்வர் போர்டின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.