கனடாவில் இதுவரை கொரோனா வைரஸின் 15,443 உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் ஊகிக்கப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. 277 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
எதிர்பார்த்ததை விட சற்று அதிகமான அளவிலேயே கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், அரசின் அறிவுரைப்படி, பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
Corona in Canada : மாகாணம் வாரியாக பாதிப்புகளின் முழு விவரம் இங்கே
இந்நிலையில், சோர்ந்திருக்கும் கனடா மக்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது ஒரு புகைப்படம்.
கனடாவில் நியூஃபவுண்ட்லேண்ட் & லேப்ரடார் பகுதியின் ட்வில்லிங்கேட்டில் உள்ள லிட்டல் ஹார்பர் எனும் இடத்தில் பனிப்பாறைகள் அதிகம் உருவாகியுள்ளன. அதில், அங்கு இருந்த வீடு ஒன்றின் பின்புறம் பிரம்மாண்ட பனிப்பாறை உருவாகியுள்ளது.
அங்கிருக்கும் வீட்டை விட பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் அந்த பனிப்பாறை காண்போரை கண் சிமிட்டாமல் இருக்க வைக்கிறது.
இந்த புகைப்படம், தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக அதிகம் பரவி வருகிறது.