கனடாவில் ஐக்கிய கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் பலர் டிசம்பர் விடுமுறை நாட்களில் வெளிநாடு பயணம் செய்த பின்னர் பதவி விலகியுள்ளனர்.
கொரோனா பரவலில் இரண்டாம் அலை காரணமாக பொது முடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை பொருட்படுத்தாது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அல்பர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னி திங்களன்று பேஸ்புக்கில் உரையாற்றினார். அப்போது நகராட்சி விவகார அமைச்சர் ட்ரேசி அலார்ட் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக கூறினார்.
தனது பணியாளர் தலைவர் ஜேமி ஹக்காபே பதவியில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நோய்களின் போது, பொது மக்களின் நம்பிக்கைக்கு பாதகமாக செயல்படும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் உயர்ந்த நடத்தைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க அல்பர்டாவாசிகளுக்கு முழு உரிமையும் உள்ளது என்று அல்பர்ட்டாவின் முதல்வர் திங்களன்று கூறினார்.
ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க உதவும் வகையில் கடந்த 10 மாதங்களில் மில்லியன் கணக்கான அல்பர்டாவாசிகள் உண்மையான தியாகங்களை செய்துள்ளனர்.
நாட்டிற்கு வெளியே விடுமுறையில் இருப்பவர்கள் குறித்து அவர்கள் கோபப்படுவது சரியானது, இதற்கு நான் பொறுப்பேற்றேன் என்று கென்னி கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: மாகாணம் முழுவதும் பனிச்சரிவு ஆபத்து! கனடாவில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட முக்கிய மாகாணம்!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.