2021 ஆம் ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் ஒவ்வொரு கனடிய குடிமகனுக்கும் தடுப்பூசி போட போதுமான அளவு மருந்துகள் கையிருப்பு இருக்கும் என்று கனடாவின் பொது சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுவரை வெளியான அனைத்து ஆவணங்களிலும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் என நம்பிக்கை அளித்திருந்த நிலையில், கடந்த புதன்கிழமை நடந்த கொரோனா மாநாட்டில் 2021 இறுதிக்குள் தடுப்பூசி பிரச்சாரம் நிறைவடையும் என்று குறிப்பிட்டிருந்தன.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2021 செப்டம்பர் மாதத்தை “பெரும்பான்மை” கனேடியர்களுக்கு தடுப்பூசி போடப்படக்கூடிய தேதியாக அறிவித்திருந்தார்.
அதே வேளையில், கனடாவின் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் ஹோவர்ட் என்ஜூ, டிசம்பர் 2021-ன் முடிவிற்குள் அதிக வாய்ப்புள்ளது என்று வேறுபட்ட மதிப்பீட்டை வழங்கியுள்ளார்.
இதனால் குழப்பம் நிலவியது. இந்த குழப்பத்தை அகற்றும் வகையில், “தற்போதைய தரவுகளின் அடிப்படையில், 2021 இறுதிக்குள், ஒவ்வொரு கனேடியருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு போதுமான எண்ணிக்கையிலான அளவுகளைக் கொண்டுள்ளது” என்று PHAC இன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
418 மில்லியன் டோஸ் வரை 7 வெவ்வேறு மருந்து நிறுவனங்களுடன் கனடா கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
விநியோகத்திற்கான அணுகலை கனடா அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதால், 2021-ஆம் ஆண்டில் அனைத்து கனடா குடிமக்களுக்கும் போதுமான தடுப்பூசிகளை வழங்குவது என்பது துல்லியமான குறிக்கோளாக இருக்கும் என உறுதியளித்துள்ளது.
இதையும் படியுங்க: கனடாவில் இன்று குளிர்கால புயலை எதிர்கொள்ளும் மாகாணம்! வெளியான முன்னெச்சரிக்கை அறிவிப்பு!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.