கனடாவின் நியூபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரோடர் மாகாணத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண அரசாங்கத்தின் அறிவிப்பின் படி,
மாகாணத்தின் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 261 ஆக உள்ளது, 258 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக கொரோனா வைரஸ் தொற்று நோயாளி மே 28 அன்று அடையாளம் காணப்பட்டார் என்றும், அதுவும் வெளிநாட்டிற்கு பயணம் செய்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 நாட்களுக்கு மேல் நியூபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரோடரில் கொரோனா தொற்று உறுதியான ஒரே ஒரு நோயாளி மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/
Twitter : https://twitter.com/canadatms