கனடாவில் இளம்பெண் மீது துப்பாக்கிச் சூடு: காப்பாற்றிய செயற்கை மார்பு

Woman's breast implant deflects bullet, saving life

கனடாவில் சாலையில் நடந்து வந்த பெண் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்யத் திட்டமிட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அந்த பெண்ணின் இதயத்தைக் குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் அந்த பெண்ணுக்கு லேசான காயங்களே ஏற்பட்டுள்ளது.

30 வயதாகும் அந்த பெண் போலீசாரிடம், தான் தெருவில் நடந்து வந்தபோது அடையாளம் தெரியாத ஒருவர் தன்னை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறியுள்ளார். இதற்கிடையே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பெண்ணின் உடலைச் சோதித்த மருத்துவர்கள் அவர் நலமாக உள்ளார் என்ற உறுதியளித்தது.

தொடர்ந்து குண்டு உடலில் எங்கு உள்ளது என்பதை கண்டறிய எக்ஸ் ரே சோதனை நடத்தப்பட்டது. முடிவுகள் வந்தவுடன் எக்ஸ்ரே படத்தில் பார்த்தபோது அந்த பெண்ணின் செயற்கை மார்பு பொறுதியிருந்ததும் அந்த மார்பு துப்பாக்கி குண்டை தாங்கி நின்றதும் தெரிய வந்தது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “அதிர்ஷ்டவசமாக அந்த பெண் இடது மார்பைச் செயற்கையாகச் சமீபத்தில் பொறுதியுள்ளார். இந்த மார்புகள் துப்பாக்கி குண்டுகளைத் திசைமாற்றிப் பிடித்து வைத்துள்ளது. இந்த நிகழ்வு ஆச்சரியமாக உள்ளது. இந்த செயற்கை மார்பு காரணமாக அந்த பெண்ணுக்கு பெரிதாகக் காயங்கள்கூட ஏற்படவில்லை” எனக் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கனடா போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சிலிகான் மார்புகள் துப்பாக்கி குண்டை தாங்கும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.