பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா பாதிப்பு குறித்த தரவுகள் மேல்நோக்கிச் செல்வதால் மாகாண சுகாதார அலுவலரின் கூற்றுப்படி சமூகக் கூட்டங்களுக்கான தடை அடுத்த மாதம் வரையில் தொடரும்.
மாகாண சுகாதார அலுவலர் டாக்டர் போனி ஹென்றி தற்போதைய சுகாதார உத்தரவுகளை பிப்ரவரி 5 ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டித்தார்.
மாகாணத்தில் புதிய கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை, விடுமுறை நாட்களில் மக்கள் தங்கள் சொந்த விதிவிலக்குகளை செய்ததைக் குறிக்கிறது.
கொரோனா ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை புரிந்துகொள்வதன் மூலம், மக்கள் பொது முடக்க விதிகளை முறையாக கடைபிடிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இருப்பினும், ஒவ்வொரு நகரத்திலும் ஒரு சிலர் விதிகளை மீறினால், அது அனைவருக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது என்று ஹென்றி விளக்கினார்.
இந்த வைரஸ் காரணமாக பல மாதங்களாக நாங்கள் நண்பர்களைப் பார்க்கவில்லை. இது இப்போது நமக்கு ஆபத்தான நேரம், தடுப்பூசி போட ஆரம்பமாகி விட்டதற்காக நம் பாதுகாப்பை நாம் விட்டுவிட முடியாது.
இது குளிர்காலம். ஆனால் வசந்த காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்று கூறினார்.
இதையும் படியுங்க: இனி மக்கள் தாராளமாக குடியேறலாம்! கனடாவின் முடிவால் உலக நாடுகள் மகிழ்ச்சி!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.