தடுப்பூசி போடப்படுவது அதிரடியாக இடைநிறுத்தம்! கனடா முழுவதுக்கும் அமலுக்கு வரும் நடவடிக்கை!

covid19
Ontario's latest goal for its immunization campaign is to give a dose of COVID-19 vaccine to every adult who wants one by June 20. (Grant Linton/CBC)

கனடாவில் Covid-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு கனடா அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அறிவித்துள்ளது.

மேலும் பரவலை தடுப்பதற்கு தடுப்பூசி மருந்துகளை கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் விரைவாக விநியோகித்துக் கொண்டு இருக்கின்றனர். க

னடாவில் இதுவரை மூன்று வகையான தடுப்பூசி மருந்துகள் கனடா அரசாங்கத்தின் அனுமதி மற்றும் அங்கீகரிப்பு பெற்று வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க நிறுவனத்தின் தடுப்பூசி மருந்து மாடர்னா, இந்தியாவிடமிருந்து பைசர் மற்றும் அஸ்ட்ரா ஜனகா போன்ற தடுப்பூசி மருந்துகள் கனடா முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அஸ்ட்ராஜனகா தடுப்பூசி மருந்து பற்றி கனடாவின் தேசிய ஆலோசனைக் குழு சிறப்பு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

கனடா முழுவதும் நோய் தடுப்பு தொடர்பாக தேசிய ஆலோசனைக் குழு ஆலோசனை செய்து வருகிறது.

இந்த ஆலோசனை குழுவின் அறிவுறுத்தல் காரணமாக கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் தடுப்பூசி மருந்துகள் விநியோகம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி விநியோகம் முதல் கட்டமாக 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தடுப்பூசி மருந்துகளை அடுத்த கட்டமாக 55 வயதிற்கு கீழ் உள்ளோருக்கு செலுத்த வேண்டும் என்ற நடவடிக்கை உடனடியாக அமலில் வருவதற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி மருந்து குறித்த மேலும் பல ஆய்வுகளை செய்ய இருப்பதன் காரணத்தினாலேயே இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தேசிய ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.