ஒன்டாரியோவில் இரண்டு உயிரிழப்புகள் -அதிகரித்துள்ள Covid-19 வழக்குகள்

Toronto Doctors

கனடாவிலுள்ள ஒன்ராரியோ மாகாணத்தில் ஜூன் மாதத்திற்கு பின்னர் covid-19 வழக்குகள் உயர்ந்து கொண்டு வருகிறது. வெள்ளிக்கிழமை ஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்றினால் 4 பேர் உயிரிழந்ததாக பதிவாகியுள்ளன

வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 510 covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளது. புதன்கிழமை பதிவாகிய வழக்குகளின் எண்ணிக்கை 324 ஆகும்.வியாழக்கிழமை covid-19 வழக்குகள் உயர்ந்து 513 ஆக பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் covid-19 வைரஸ் தொற்று வழக்குகளின் ஏழு நாள் சராசரி எண்ணிக்கை 200 ஆக இருந்தது. ஆனால் இன்று இந்த வாரத்திற்கான 7 நாள் சராசரி எண்ணிக்கை 399 ஆக உயர்ந்துள்ளது.நேற்று ஏழு நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 375 ஆக இருந்தது.

ஒன்டாரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பத்து பேர்களும் 16 பேருக்கு வைரஸ் தொற்றினை பரப்புவார்கள் என்று மாகாணத்தில் அறிவியல் ஆலோசனை அட்டவணை கூறுகிறது. மேலும் இந்த அட்டவணை கடந்த வசந்த காலத்தில் இருந்து மாகாணம் முழுவதும் covid-19 வைரஸ் தொற்று காணப்படாத அளவிற்கு பெருக்கம் அடைந்துள்ளதாக தெரிவித்தது.

ஒன்டாரியோ மாகாணத்திலுள்ள அனைத்து ஆய்வகங்களில் அதிக அளவு மக்களுக்கு ஒரே நாளில் covid-19 பரிசோதனைகளைச் செய்து பரிசோதனை முடிவுகளை வெளியிட்டது. சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரா கடந்த 2 மாதங்களில் covid-19 வைரஸ் தொற்றினால் இரண்டு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தற்பொழுது வரை covid-19 வைரஸ் தொற்றினால் 9416 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3110 ஆகும் .

Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 5,41916 என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.ஒன்டாரியோவில் இதுவரை பதிவாகிய வழக்குகளின் எண்ணிக்கை ஜூன் 22 ஆம் தேதிக்கு பின்னர் அதிக அளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.