கனடாவில் covid-19 வழக்குகள் தீவிரமாக பரவி வருவதால் டொரண்டோ மேயர் ஜான் டோரி நகரில் அத்தியாவசியமான சேவைகளை மாற்றியமைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார். டொரண்டோ நகரம் மோசமான சூழ்நிலையை நோக்கி செல்கிறது. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட முன் களப்பணியாளர்கள் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை சிட்டி ஹாலில் நடைபெற்ற மாநாட்டில் வீரியம் மிக்க ஓமிக்ரோன் மாறுபாட்டின் விரைவான பரவல் காரணமாக எதிர்வரும் வாரங்களில் அறிவிக்க இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து ஜான் டோரி விவரித்தார்.
டொரன்டோ பொது நூலகம் ஊழியர்கள் பற்றாக்குறையால் அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை 44 கிளை நூலகங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. டொரன்டோ பொது நூலகத்திற்கு மொத்தம் 99 கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். டொரன்டோ மிருகக்காட்சிசாலை ஆனது வெளிப்புறப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டாலும் ஜனவரி 27 வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Covid-19 வைரஸ் தொற்றின் முதலாவது அலையின் போது கழிவுகளை சுத்தம் செய்வது உட்பட பல சேவைகளுக்கு பணியாளர்கள் பற்றாக்குறை இருந்ததால் டொரன்டோ நகரம் தற்காலிகமாக பல சேவைகளை தடை செய்தது.
டொரண்டோவில் அவசர சேவைகளுக்கு அவசர அழைப்புகளின் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கு நகரம் தொடர்ந்து பதிலளிக்கும் என்று முதல்வர் ஜான் டோரி கூறினார். நகரசபைகள் சேவைகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக ஒன்டாரியோவில் covid-19 தீவிரமாக பரவி வருவதால் விழிப்புணர்வுடன் செயல்படுமாறு தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் கீரன் எச்சரித்தார்