ஒன்டாரியோ மாகாணத்தில் நன்றி தெரிவிக்கும் நாள் ஆண்டுதோறும் மக்களால் கொண்டாடப்படுகிறது. கடந்து 2020ஆம் ஆண்டு covid-19 வைரஸ் பெரும் தொற்று காரணமாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு ஒன்டாரியோ சுகாதார அமைப்பு மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.
ஒன்டாரியோ குடியிருப்பாளர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக covid-19 வைரஸ் தொற்றுக்கு மத்தியில் நன்றி செலுத்துகின்றனர். கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருடாந்திர விடுமுறைக்கு ஒருங்கிணைவார்கள் என்று கூறப்படுகிறது.
ஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 தடுப்பூசி மருந்துகள் போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. எனவே இந்த வருடம் தடுப்பூசி விகிதங்கள் அதிகரித்திருப்பதால் கூட்ட வரம்புகளை பின்பற்றி நன்றி செலுத்துவதற்கு அனுமதிக்கப்படும் என்று மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விடுமுறை காரணமாக திங்கட்கிழமை சில வணிகங்கள்,சேவைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்படும். திறந்த மற்றும் மூடப்பட்டுள்ள பட்டியல் விவரங்களை தொகுத்து டொரன்டோ வெளியிட்டுள்ளது.
திங்கட்கிழமை சில உணவகங்கள் மூடப்படும். தபால் அலுவலகங்கள் ,நூலகங்கள் ,வங்கிகள் மற்றும் பெரும்பாலான நகர சேவைகள் திங்கள் கிழமை இயங்காது. கனடாவின் ஒண்டர்லாண்ட் இயங்காது.
பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் இயங்காது. Contemporary art அருங்காட்சியகம் மற்றும் தி ராயல் ஒண்டாரியோ அருங்காட்சியகம் மூடப்படும்.
திரையரங்குகள் மற்றும் உயிரியல் பூங்கா வழக்கமான முறையில் இயங்கும் என்று மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.