Santhoskumar Selvarajah : கனடாவில் இளம்பெண்ணிடம் தமிழ் இளைஞன் செய்த இழிவான செயல் – கையும் களவுமாக பிடித்த காவல்துறை!

Santhoskumar Selvarajah
Santhoskumar Selvarajah Toronto

கனடாவில் டொராண்டோ நகரில் இளம் பெண்ணை வலுக் கட்டாயமாக காரில் கடத்தி சென்ற குற்றச்சாட்டில் சந்தோஷ்குமார் செல்வராஜா (Santhoskumar Selvarajah)  என்ற பெயருடைய தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டொராண்டோவில் கடந்த திங்கள்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

சந்தோஷ்குமார் செல்வராஜா என்ற 34 வயது நபர் Empringham Dr மற்றும் Sewells Rd பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை வலுக் கட்டாயமாக காரில் கடத்தி சென்றார்.

இது தொடர்பாக காவல் துறையினர் சில மணி நேரத்துக்கு வெளியிட்ட அறிக்கையில், கடத்தப்பட்ட பெண் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் காயமடைந்த அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது வருகிறது என்று தெரிவித்தனர்.

Khalistan : தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்த சீக்கிய அமைப்பு திட்டம்: கனடா அரசின் அதிரடி முடிவு!

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் சந்தோஷ்குமார் செல்வராஜா என்ற தமிழ் இளைஞரை தேடி வருவதாக தெரிவித்தனர்.

கடத்தல், ஆபத்தான வன்முறை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அது தொடர்பில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சற்று முன்னர்  காவல் துறையினர் வெளியிட்ட தகவலில் கூறுகையில், சம்பவம் தொடர்பில் சந்தோஷ் குமாரை கைது செய்துள்ளோம்.

இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சந்தோஷ்குமார் செல்வராஜாவை எங்கு கண்டாலும் பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விடுக்கப் பட்டிருந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms