ரிச்மண்ட் சாலையில் இரண்டு லாரிகள் மோதி பயங்கர விபத்து – ஒன்டாரியோ காவல்துறை

accident
police drug

ஒன்டாரியோவில் சனிக்கிழமை இரவு இரண்டு லாரிகள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு ஒன்டாரியோவில் உள்ள செயின்ட். தாமஸ் பகுதியில் இரண்டு லாரிகள் விபத்துக்கு உள்ளாகின. மேலும் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

செயின்ட் தாமஸ் பகுதிக்கு கிழக்கே அமைந்துள்ள Elgin county -ல் இரவு 9 மணிக்கு முன்பு லாரி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் ஆதாரங்களை புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

விபத்தின்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாகனத்தில் இருந்த இரண்டாவது ஓட்டுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை மற்றும் மூன்றாவது நபர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று விசாரணையின் வாயிலாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செயின்ட் தாமஸ் பகுதியில் உள்ள ரிச்மண்ட் சாலையில் இரண்டு லாரிகளும் வடக்கு திசையில் பயணிக்கும் போது வாகனம் பள்ளத்தில் சரிந்தது. ஒருவர் ஓட்டுனர் மற்றும் பயணியை தனது முயற்சிகளால் வெளியேற்றினார் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

இறந்தவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை. உறவினர்களின் அறிவிப்பு நிலுவையில் உள்ளது.

முறையாக சீட் பெல்ட்டுகள் அணியாதது, மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கியது மற்றும் அதிக வேகம் போன்றவை விபத்திற்கு காரணமாக காவல்துறையினரால் கூறப்படுகிறது. விபத்து குறித்து மேலும் புலன் விசாரணை செய்வதற்கு விபத்தை நேரில் பார்த்த அல்லது வீடியோ ஆதாரங்கள் கொண்டவர்கள் காவல் துறையை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது