Real HEROES of COVID 19 : தமிழகத்தை சேர்ந்த தம்பதிகள் கனடாவில் கொரோனா பேரிடர் காலத்தில்,
தன் நலன் கருதாது செய்த சேவையை கெளரவிக்கும் வகையில் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செட்டிநாடு பகுதியை பூர்வீகமாக கொண்டவரும், மதுரையில் பிறந்தவருமான வள்ளிக் கண்ணன் மருதப்பன் இச்சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இவர் கனடாவின் பதிவு செய்த, என்.ஜி.ஓ எனப்படும் லாப நோக்கமற்ற கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் சேர்மனாக இருந்து வருகிறார்.
வள்ளிக் கண்ணன் கொரோனா பேரிடர் சூழலிலும் தமிழ் நாட்டு நடனக் கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் மற்றும் மேடை இசைக் கலைஞர்களுக்காக யூடியூப் நிகழ்ச்சி நடத்தி வந்துள்ளார்.
மேலும் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்ற நோக்கில் பண உதவியும் செய்துள்ளார்.
அதே போல வள்ளிக்கண்ணன் மனைவி பார்வதியும், கனடாவில் ஊரடங்கு காரணமாக சிக்கித் தவித்த மாணவர்களுக்கு சுமார் 10 வாரங்கள் உணவளித்து வந்துள்ளார்.
சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு, தினமும் உணவு விநியோகம் செய்யும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வள்ளிக்கண்ணன் மற்றும் பார்வதியின் சமுதாயப் பணி, சேவை மனப்பான்மையை கெளரவிக்கும் வகையில், STA EVENTS மற்றும் SUPREME GROUP OF COMPANYS KUWAIT இணைந்து கனடா நாட்டின் Real HEROES of COVID 19 என்னும் விருது வழங்கி பாராட்டி கெளரவித்துள்ளது.
எவ்வித எதிர் பார்ப்பும் இன்றி, மக்கள் படும் துயரத்தை அறிந்து கொண்டு, அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே செயல்பட்டதால், இந்த கௌரவம் அவர்களை தேடி வந்துள்ளது.
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/
Twitter : https://twitter.com/canadatms