இங்கிலாந்து ராணி எலிசபெத் II 70 ஆண்டுகளை நிறைவு செய்து தனது பிளாட்டினம் ஜூபிலி விழாவை கொண்டாடி வருகிறார். ராணி எலிசபெத் கனடாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி தற்பொழுது லிபரல் அரசாங்கத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்றவாறு மாறினார் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கனடிய மக்களுக்கு ராணி எலிசபெத் அவர்கள்தான் மன்னர் என்று காட்டுவதன் மூலம் கனடாவில் ராணியின் செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளது என்பதை உணர முடிகிறது என்று சைமன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பேராசிரியர் ஆண்ட்ரூ ஹியர்ட் கூறினார்.
இங்கிலாந்து மன்னர் வம்சாவளியில் தோன்றினாலும் கனடாவின் சொந்த நாடு என்ற மிக நெருங்கிய உணர்வின் ஒருங்கிணைப்பாளராக எலிசபெத் இருந்தார். மேலும் கலாச்சார மற்றும் அரசியல் வழியில் கனடாவின் ராணியாக அவர் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார்.
ராணி எலிசபெத் சிம்மாசனத்தில் தனது 70 ஆண்டு காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். ராணி எலிசபெத் இளவரசியாக இருந்தபோதே கனடா உடனான அவரது உறவு தொடங்கியது. ராணி எலிசபெத் 1952 ஆம் ஆண்டு இளவரசியாக அங்கீகரிக்கப்பட்டு முடிசூட்டப்பட்டார். அவர் சிம்மாசனம் ஏறியதிலிருந்து சுமார் 31 முறை கனடாவிற்கு வருகை புரிந்துள்ளார்.
கனடா மீது ராணிக்கு உண்மையான பாசம் இருப்பதாகவும் பேராசிரியர் கூறினார். மேலும் ராணி கனடாவிற்கு வந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். இது கனடியர்கள் தனித்துவமானவர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள் மற்றும் தெரிந்து கொள்ள தகுதியானவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தியது.
கனடியர்களின் இன்பம் மற்றும் துன்பத்திலும் அவரது ஆட்சிக் காலத்தின் போது கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது ஆகும்