Quebec : இரு சிறுமிகள் மரணத்தில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சு – இறுதியில் தந்தைக்கும் நேர்ந்த கதி!

Quebec
Quebec Child's Father

கியூபெக்கில் ( Quebec ) தந்தையுடன் மாயமான சிறுமிகள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில்,  அவர்கள் இறப்பு குறித்த மர்மம் இறுதி வரையில் வெளிவராமலே போய்விட்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கியூபெக்கைச் சேர்ந்த 44 வயதான மார்ட்டின் கார்பென்டியர் என்பவர், 11 வயதான மூத்த மகள் நோரா மற்றும் 6 வயதான இளைய மகள் ரோமி  ஆகியோருடன் மர்மமான முறையில் மாயமானார்.

வீட்டிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர்கள் சென்ற கார் பயங்கர விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அங்கு தேடியபோது காரில் யாரும் இல்லை.

தந்தையையும், அவரது இரு மகளையும் தீவிரமாக தேடிய நிலையில், மூன்று நாட்களுக்குப்பின் சிறுமிகள் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்கள்.

தந்தை மார்ட்டின் கிடைத்தால் மட்டுமே, சிறுமிகள் எப்படி இறந்தனர் என்று தெரியவரும் என்ற கோணத்தில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டனர்.

இந்நிலையில், சுமார் இரண்டு வார தேடுதல் வேட்டைக்குப்பின் மார்ட்டினும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்களில் ஒருவர், கேட்பாரற்ற உடல் கிடப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவலளிக்க, அங்கு வந்த காவலர்கள் அது மார்டின் என்பதை உறுதி செய்தனர்.

அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என  கருதுகிறார்கள். இந்த செய்தி காவல்துறையினரின்  ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மார்ட்டின் உயிரோடு கிடைப்பார் என்று நம்பிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் சிறுமிகள் எப்படி இறந்தார்கள் என்ற உண்மை வெளிவரும் என்பதால் அப்படி எண்ணினோம். ஆனால், உண்மை வெளிவராமலே போய்விட்டது என்று அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms