பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு -மாகாணங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமா?

கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் வீரியம் மிக்க ஓமிக்ரோன் மாறுபாடு அச்சுறுத்தி வருவதால் பொது சுகாதார கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ covid-19 பற்றிய தகவல்களை வெளியிட உள்ளார்.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி மருத்துவர் தெரசா டாம் மற்றும் துணை தலைமை பொது சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் ஹேவர்ட் நூ போன்ற அமைச்சர்களுடன் நண்பகல் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாகாணங்கள் முழுவதிலும் covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் அதிகரித்து வருகின்ற நிலையில் கவலைக்குரிய மாறுபாடான ஓமிக்ரோன் மாறுபாடு பல மாகாணங்களிலும் முதன்மையான மாறுபாடாக மாறி வருகிறது.
கியூபெக் மாகாணத்தில் பதிவாகியுள்ள 5043 covid-19 வழக்குகளில் 80 சதவீதத்திற்கும் மேலாக ஓமிக்ரோன் மாறுபாடு தொடர்ந்து மூன்றாவது நாளாக பதிவாகி வருவதை புள்ளி விவரங்கள் மூலம் கண்டறிய முடிகிறது.

நாடு முழுவதும் தடுப்பூசி பிரச்சாரத்தை விரிவுபடுத்த தலைநகர் ஒட்டாவாவிடம் இராணுவ உதவி கேட்டுள்ளதாக பொது பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெனிவில் கில்பால்ட் கூறினார். அவசரகால நிலை அமைச்சர் பில் பிளேர் கனடாவிலுள்ள மாகாணங்கள் முழுவதிலும் வழக்குகள் அதிகரித்து வருவது வருத்தம் அளிப்பதாகவும் ,மாகாண அரசாங்கத்துடன் மத்திய அரசாங்கம் இணைந்து செயல்படும் என்றும் கூறினார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆல்பர்ட்டா அரங்குகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் அமரக்கூடிய இடங்களை 50 சதவீத செயல்திறனுடன் செயல்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும்