Alberta: செவ்வாய்க்கிழமை மாலை, கல்கரி கத்தோலிக்க பள்ளி மாவட்டத்தில் இரண்டு பள்ளிகள் கூடுதலாக கொரோனா பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. மொத்தம் ஒன்பது மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் பரவி வரும் நிலையில், ஆல்பர்ட்டா முழுவதும் பல மாணவர்கள், பள்ளி செல்ல ஆரம்பித்து இரண்டு வாரங்களாகிவிட்டது.
இந்த நிலையில், கல்கேரியிலுள்ள தனிப்பட்ட பள்ளிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒன்பது நேர்மறையான வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கல்கரி கத்தோலிக்க பள்ளி மாவட்டத்தின் செப்டம்பர் 8 செவ்வாய்க்கிழமை நிலவரப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஐந்து பள்ளிகள்:
- St. Angela Elementary
- Divine Mercy Elementary
- Notre Dame High School
- St. Wilfrid Elementary School
- St. Francis High School
கல்கரி கல்வி வாரியத்திற்குள் உள்ள நான்கு பள்ளிகள்: (செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டவை)
- Canyon Meadows School
- Bowness High School
- Lester B. Pearson High School
- Bridlewood School
கொரோனா உறுதி செய்யப்பட்டது மாணவர்களிடமா அல்லது ஊழியர்களிடமா என்று பள்ளி வாரியம் கூறவில்லை.
இந்த சூழலில், கொரோனா தொற்று பரவுவதற்கான அபாயத்தைக் கட்டுப்படுத்த பாடசாலைகளுடன் நேரடியாகப் பணியாற்றி வருதாக அல்பர்ட்டா சுகாதார சேவை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அல்பர்ட்டா சுகாதார சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில், வகுப்பறை அமைப்பை மதிப்பிடுவதும், தொற்றுகளின் நெருங்கிய தொடர்புகளை அடையாளம் கண்டு மதிப்பிடுவதும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படும் எந்தவொரு நபரும் அல்பர்ட்டா சுகாதார சேவையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: 19 மாத குழந்தை முகக்கவசம் அணியவில்லை என்பற்காக ஒட்டுமொத்த பயணிகளையும் விமானத்திலிருந்து இறக்கிவிட்ட விமானி!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.