கனடா 2024 ஆம் ஆண்டுவரை ,ஒவ்வொரு கனடியருக்கும் 3 mRna தடுப்பூசி மருந்து அளவுகளை பெடரல் covid-19 தடுப்பூசி ஒப்பந்தங்களின் படி ஒவ்வொரு ஆண்டும் போதுமான அளவுகளைப் பெற வேண்டும் .கனடாவில் நோய்த்தடுப்பிற்கான தேசிய ஆலோசனைக் குழு கனடியர்கள் அனைவரும் 4வது கட்ட covid-19 தடுப்பூசி மருந்தினை பெறவேண்டுமென்று பரிந்துரைக்கிறது.
தொற்று நோயினை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு covid-19 பூஸ்டர் தடுப்பூசி மருந்துகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது சிறந்த வழிமுறை அல்ல என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடாவில் covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலையை கட்டுப்படுத்துவதற்கு covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான நான்காவது தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுகின்ற நிலையில் போதுமான அளவுகள் இருக்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கைகளில் உள்ள ஒப்பந்தங்கள் ஆதரிக்கின்றன.
65 மில்லியன் பைசர் பயோன்டெக் தடுப்பூசி மருந்து அளவுகள், 35 மில்லியன் மாடர்னா தடுப்பூசி மருந்து அளவுகள் கடந்த ஆண்டு கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தங்களின் படி இந்த ஆண்டு கனடாவிற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 35 மில்லியன் மாடர்னா தடுப்பூசி மருந்து அளவுகள் மற்றும் 60 மில்லியன் பைசர் பயோடெக் தடுப்பூசி மருந்து அளவுகள் கனடாவிற்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தங்களும் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.