முதல் கட்ட தடுப்பூசி மற்றும் முழுமையான தடுப்பூசி:
டொரன்டோ நகரிலுள்ள பியர்சன் விமான நிலையம் புதிய நடவடிக்கை திட்டத்தை அறிவித்துள்ளது. பியர்சன் விமான நிலையத்திற்கு வருகின்ற சர்வதேச பயணிகள் அனைவரும் (customs) சுங்க அமைப்பை அடைவதற்கு முன்பு தடுப்பூசி செலுத்தியுள்ள நிலைகளின் அடிப்படையில் பிரிக்கப்படுவார்கள் என்று பியர்சன் விமான நிலையம் சனிக்கிழமை அறிவித்தது.
“அமெரிக்கா அல்லது வேறு அயல்நாடுகளில் இருந்து கனடாவிற்கு வருகின்ற பன்னாட்டு பயணிகள் விமான நிலையத்தின் சுங்கத்தை அடைவதற்கு முன்பு முதல் கட்ட தடுப்பூசி மற்றும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் போன்று தனித்தனியாக பிரிக்கப்படலாம் ” என்று டொரன்டோ பியர்சன் விமான நிலையத்தின் முதன்மை தகவல்தொடர்பு ஆலோசகர் பெவர்லி மெக்டொனால்ட் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
முதல் கட்ட தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் மற்றும் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் போன்ற பயணிகளுக்கு வெவ்வேறு நுழைவு வாயில் இருப்பதால் எல்லைகளின் அனுமதியை சீர்படுத்த இந்த முடிவை எடுத்ததாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்துதல் மற்றும் பரிசோதனை :
முதல் கட்ட தடுப்பூசி மட்டும் பெற்றுள்ளவர்கள் கனடாவிற்குள் நுழைந்த பின்னர் தனிமைப்படுத்துதல் மற்றும் covid-19 பரிசோதனை போன்றவற்றை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். ஆனால் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் சில நடவடிக்கைகளுக்கு விலக்கு பெற அனுமதிக்கப்படும்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி அமெரிக்க குடிமக்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பின்னர் கனடாவிற்குள் நுழையும் பொழுது கனடிய மக்களைப் போலவே தனிமைப் படுத்துதல் மற்றும் covid-19 பரிசோதனை போன்றவற்றிலிருந்து விலக்கு பெறுவார்கள் என்று அறிவித்தது.