கரோனா வைரஸ் தொற்று கனடாவில் கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து தீவிரமாக பரவி கொண்டு வருகிறது.
இதன் காரணத்தால் பல்வேறு பாடசாலைகளும் மூடப்பட்டு மாணவர்களுக்கு மெய்நிகர் வகுப்புகள் இணையத்தின் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டொரன்டோ நகரத்திலுள்ள மவுண்ட் டென்னிஸ் என்ற பகுதியில் அமைந்திருக்கும் our lady of victory என்ற கத்தோலிக்க பாடசாலையானது தற்பொழுது மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் இந்த பகுதியில் கட்டுக்குள் இருந்ததன் காரணத்தினால் பாடசாலைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் பாடசாலை திறக்கப்பட்ட பின்னர் அந்த பாடசாலையில் பயின்ற 12 மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாடசாலைகள் திறக்கப்பட்டு சுமார் 12 மாணவர்களுக்கு covid-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் டொரன்டோ நகரின் பொது சுகாதார அமைச்சகம் அப்பாடசாலை மற்றும் அதன் செயற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.
மேலும் மூடப்பட்ட இந்த பாடசாலையானது மீண்டும் திறக்கப்படும் தருவாயில் பாடசாலையில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
இந்த அறிவிப்பினை டொரன்டோ நகரின் பொது சுகாதார அமைச்சக அதிகாரிகள் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 12 மாணவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள் நகரின் ஒரே பகுதியிலிருந்து பாடசாலைக்கு வருபவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இதுவரை டொரன்டோ நகரில் இரண்டாவதாக பாடசாலைகள் வைரஸ் தொற்று காரணத்தினால் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.