Ottawa : கனடிய வரலாற்று அருங்காட்சியகத்திற்கு வெளியே இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

Ottawa
Ottawa bridge

இந்த மாத ஆரம்பத்தில் கனடா வரலாற்று அருங்காட்சியகத்திற்கு அருகிலுள்ள, ஒட்டாவா ( Ottawa )  நதியின் மீது உள்ள பாலத்திற்கு அருகில், ஒரு இளம் பெண்ணை பிடித்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, சந்தேக நபரின் அடையாளத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.

ஜூலை 6 ஆம் தேதி அதிகாலை 4:30 மணியளவில், தனியாக நடந்து கொண்டிருந்த ஒரு பெண், அலெக்ஸாண்ட்ரா பாலம் அருகே சென்ருள்ளார்.

அப்போது வலுக்கட்டாயமாக பிடித்து புதருக்குள் இழுக்கப்பட்டு, சந்தேக நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டதாக காவல் துறையினர்  கூறுகின்றனர்.

அந்த நபர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்  என இருவரும் அலெக்ஸாண்ட்ரா பாலத்தின் பயணிகளுக்கான நடைபாதையில் நடந்து கொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, சந்தேக நபரை யார் என்றே தெரியாது. பின்வரும் அடையாளம் உள்ள நபரை புலனாய்வாளர்கள் தேடுவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

கலப்பு இனத்தை சேர்ந்தவர். 25 முதல் 30 வயது இருக்கும்.  5’8 “ உயரமும், 160 பவுண்ட் எடையும் கொண்டவராக இருப்பார்.

ஆப்ரோ டிசைனில் சிகை அலங்காரம் செய்திருப்பார். கருப்பு முடி கொண்ட அவர், பிரஞ்சு மற்றும் ஆங்கில மொழி பேசுபவர் என்று அறியப்படுகிறது.

சம்பவம் நடந்த நேரத்தில் அவர் இருண்ட சட்டை மற்றும் பேண்ட் அணிந்திருந்தார்.

ஜூலை 6 ஆம் தேதி அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பின்வரும் பகுதிகளில் இருந்தவர்கள் 819-243-4636 என்ற எண்ணில் புலனாய்வாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல் துறையினரால் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் ரோந்துப் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms