கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1476 covid-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மாகாணம் முழுவதும் தினசரி covid-19 பரிசோதனைகள் செயலாக்கப்பட்டு வருகின்றன .
ஆய்வகங்களில் பரிசோதனைக்காக பெறப்படும் 20 சளி மாதிரிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவை நேர்மறையான முடிவுகளை வெளியிடுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மே மாதத் தொடக்கத்தில் நேர்மறை முடிவுகள் உயர்ந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
Covid-19 வைரஸ் தொற்று வழக்குகளின் ஏழு நாள் சராசரி தற்போது 1200க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு 7 நாள் சராசரி 761 ஆகவும், நேற்று 1194 ஆகவும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
ஒன்டாரியோ மாகாணத்தில் ஏழு மாதங்களில் அதிகபட்சமாக 1607 கோவிட்19 வழக்குகள் சனிக்கிழமை பதிவாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய covid-19 வழக்குகளில் ஏறத்தாழ 570க்கும் மேற்பட்டோர் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை பெறாதவர்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓரளவு தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் ஞாயிற்றுக்கிழமை நோயாளிகளில் 41 சதவீதம் பேர் ஆவர். ஒன்ராரியோ மாகாணத்தின் மக்கள் தொகையில் 23 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்.
தடுப்பூசி போட்டவர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதாலும் ஓமிக்ரோன் மாறுபாட்டின் தாக்கம் அச்சுறுத்துவதாலும் பல மாதங்களாக இந்த விகிதம் கீழ் நோக்கி சரிந்து வருகிறது.