வீரியமிக்க ஓமிக்ரோன் வைரஸ் தொற்று அச்சுறுத்தலின் காரணமாக கனடாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.பின்னர் மாகாணங்கள் முழுவதிலும் covid-19 வழக்குகள் படிப்படியாக குறைந்த நிலையில் சுகாதார கட்டுபாடுகள் மீண்டும் தளர்த்த படுகின்றன.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் உயர்மட்ட மருத்துவர் covid-19 தொற்றுநோய் செய்தி மாநாட்டை நடத்த உள்ளார். இந்தவாரம் மாகாணத்தில் சுகாதார கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தியதிலிருந்து நடத்திய முதல் செய்தி மாநாடு ஆகும்.
திங்கட்கிழமை முதல் மீண்டும் 50 சதவீத திறனுடன் இயங்குவதற்கு தொடங்கிய பிறகு covid-19 வழக்குகள் அதிகரிக்கும் என்று மாகாணத்தின் மருத்துவ நிபுணர்கள் தொற்றுநோய் ஆலோசகர்கள் கூறியிருந்தனர். இதனை அடுத்து தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் கீரன் மூர் சுகாதார நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கவலைக்குரிய மாறுபாடாக கருதப்படும் ஓமிக்ரோன் வைரஸ் தொற்றினால் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள பொதுசுகாதார கட்டுப்பாடுகளை தளர்த்துவது வைரஸ் தொற்று பரவலை தீவிரப்படுத்தும் என்று ஒண்டரியோ covid-19 அறிவியல் ஆலோசனை அட்டவணை தெரிவித்தது.ஆனால் எந்த அளவிற்கு பரவல் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்களால் கூறமுடியவில்லை.
மாகாணத்தில் PCR பரிசோதனைகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அணுகலை வழங்கியுள்ளதால் வைரஸ் தொற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கையை தீர்மானிக்க முடியவில்லை. உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் திரையரங்குகள் போன்றவை பகுதி அளவு செயல்படுவதற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.