கனடாவின் கல்வித் துறை அமைச்சர் ஸ்டீபன் லெக்ஸி குயின்ஸ் பார்க் இடத்திலிருந்து வெள்ளிக்கிழமை அன்று காலைப் பொழுதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில், ஹேமில்டன் பகுதியின் முதலமைச்சர் ஆன எம் பி பி டோன்னா, ஸ்பெல்லி பாராளுமன்ற அலுவலர் பதவியில் இருந்து, பொருளாதாரத் துறை முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சராக பதவி மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது கடந்த வாரம் டொரன்டோ நகரில் யோர்க் மற்றும் பில் பகுதியில் உள்ள மாணவர்கள் பாடசாலைக்கு திரும்பியதை அடுத்து வெளியிடப்பட்டது ஆகும்.
Covid-19 தொற்றானது தீவிரமாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளையும் மீறி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளாதவர்கள் எளிதில் பாதிப்படைய வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை அன்று டொரன்டோ பகுதியின் பொது சுகாதார அமைப்பின் அறிவித்தலின் படி டொரன்டோ பகுதியில் 8 பாடசாலைகளில் குறைந்தது ஒரு நபர் ஆவது உருமாறிய வைரஸ் திரிபுகளினால் பாதிப்படைந்து இருப்பதாக பதிவுகளில் மூலம் தகவல்கள் வெளியாகின்றன.
அதிகப்படியான தொற்றுகள் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களிடையே பரவி வருவதாகவும் பதிவுகளிலிருந்து தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளையில் ஒன்டாரியோ பகுதியின் அமைந்துள்ள பாடசாலை மாணவர்களிடையே மட்டும் 70 பேர் புதிய வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.