ஒன்ராரியோ மாகாணத்தில் தடுப்பூசி சான்றிதழ் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பாஸ்போர்ட் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. Covid-19 தடுப்பூசி சான்றிதழுக்கு ஆதரவாக 10-ல் எட்டு கனடியர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.கியூபெக்கில் இந்த வாரம் தடுப்பூசி சான்றிதழ் முறையை தொடங்குவதற்கு முன்பு ஒண்டாரியோ மாகாணத்தில் பின்பற்றப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இரண்டு கட்ட தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் – தடுப்பூசி சான்றிதழ் நடைமுறைக்கு வருகிற
கருத்து கணிப்பு பெரும்பாலான ஆரம்ப மற்றும் மேல்நிலை பாடசாலைகளில் தனி கற்றலை மீண்டும் திறப்பதால் டெல்டா மாறுபாடு பற்றிய அச்சம் அவர்களின் நிலையை மாற்றினார்களா என்று பிரித்துக் காட்டியது.
கடந்த வாரம் Leger கருத்துக் கணிப்பில் 56% கனடியர்கள் பதில் அளித்தபோது உடற்பயிற்சி கூடங்கள், உணவு விடுதிகள் , பார்கள் ,கொண்டாட்டங்கள் மற்றும் கச்சேரி அரங்குகள் போன்ற நிகழ்வுகளுக்கு மாகாணத்தின் தடுப்பூசி பாஸ்போர்ட்டை வலுவாக ஆதரிப்பதாக கூறியுள்ளனர்.ஓரளவு ஆதரவு தெரிவித்துள்ள கனடியர்கள் 25% ஆவர்.covid-19 தடுப்பூசி பாஸ்போர்ட்டை 13% கனடியர்கள் கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர். 9% கனடியர்கள் ஓரளவு எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்லைன் வழியாக நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பு 18 வயதுக்கும் மேற்பட்ட கனடியர்கள் இடமிருந்து பதில்கள் பெறப்பட்டது. சுமார் 1544 கனடியர்கள் கருத்துக் கணிப்பில் பதிலளித்துள்ளனர்.
வருகின்ற செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி ஒன்ராரியோ மாகாணத்தில் நடைமுறைக்கு வரும் தடுப்பூசி பாஸ்போர்ட்டை புதன்கிழமை அறிவிப்பதற்கு முன்பு ஆகஸ்ட் 27 முதல் 29 வரை கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மணிதொபா, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கியூபெக் போன்ற பகுதிகளில் சமீபத்தில் இதே போன்ற நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது