Covid-19 வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் சாதாரணமானது, குறைவான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது போன்ற தனது விருப்ப சிந்தனைகளை மக்கள் நிறுத்த வேண்டும் என்று ஒன்டாரியோ மாகாணத்தின் அறிவியல் ஆலோசனை அட்டவணையின் தலைவர் மருத்துவர் வலியுறுத்தியுள்ளார்
.covid-19 மாறுபாடு லேசான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற எந்த ஒரு கட்டு கதையையும் நம்ப வேண்டாம் என்று கூறினார்.
ஒன்ராரியோ மாகாணத்தில் ஓமிக்ரோன் மாறுபாடு ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக இந்த வாரம் அமையும் என்று கூறினார். இந்த மாறுபாடானது முன்னோடி இல்லாதது, வீரியம் மிக்கது மேலும் இது மிகவும் சவாலானது என்று மாகாணத்தின் அறிவியல் ஆலோசனை அட்டவணையின் தலைவர் மருத்துவர் பீட்டர் ஜூனி எச்சரித்தார்.
“ஓமிக்ரோன் மாறுபாடு லேசான வைரஸ் தொற்று என்று உலவி வரும் கட்டுக்கதையை நாம் இப்போது முடிவு கட்ட வேண்டும். தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவுவதாக கூறப்பட்ட கவலையின் மாறுபாடான ஓமிக்ரோன் மாறுபாடு லேசான நோயை ஏற்படுத்துகிறது என்று மக்களில் சிலர் நம்புகின்றனர். வைரஸ் தொற்றுக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று கொண்டவர்களுக்கும் ஓமிக்ரோன் பாதிப்பு ஏற்படுவதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் ” என்று பீட்டர் கூறினார்
ஒன்ராரியோ மாகாணத்தில் ஒவ்வொரு 3 நாட்களுக்கும் ஓமிக்ரோன் மாறுபாடு இரட்டிப்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அறிவியல் ஆலோசனை அட்டவணை கூறுகிறது. இன்று முதல் 50 வயதுக்கு மேற்பட்டோர் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மூன்றாவது கட்ட தடுப்பூசியால் பூஸ்டர் தடுப்பூசி மருந்தினை முன்பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது .